க.பொ.த (உயர்) தரம் - 2020 ஆம் ஆண்டிற்கான மாகாண மட்ட சாதனையாளர் கௌரவிப்பு
க.பொ.த (உயர்) தரம் - 2020 ஆம் ஆண்டிற்கான மாகாண மட்ட சாதனையாளர் கௌரவிப்பு 20.11.2022 ஞாயிற்றுக்கிழமை இன்று காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது. அதில் எமது பாடசாலையின் க.பொ.த (உயர்) தரத்தில் தமிழ்ப் பாடம் கற்பிக்கும் திருமதி.சுயாதா சர்வானந்தன் (M.A )ஆசிரியர் கௌரவிக்கப்பட்டார். அத்துடன் எமது பாடசாலையின் அதிபர் செல்வி.இ.சுப்பிரமணியக் குருக்கள் அவர்கள் முன்னைய பாடசாலையின் சிறந்த பெறுபேறு வருவதற்கு அயராது பாடுபட்டமைக்காக அவருக்கும் கௌரவிப்பு இடம்பெற்றது. அவ்விருவரினது அயராது அர்ப்பணிப்பையும் விடாமுயற்சியையும் பாராட்டுவதில் பாடசாலைச் சமூகம் பெருமிதம் அடைகின்றது.
Write a comment